அருப்புக்கோட்டையில்ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அருப்புக்கோட்டை நகரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை - மதுரை சாலையில் நெசவாளர் குடியிருப்பு அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பாலத்தை சீரமைக்கவும், அகலப்படுத்தவும் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.
ஆனால், அப்பணிகள் நிறைவடைந்த பின்னர், பாலத்தின் ஒருபக்கத்தில் மட்டும், அதிக இடைவெளிவிட்டு எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. போதிய அளவில் மின் விளக்குகள் இல்லாததால், இப்பாலம் இருளடைந்தே காணப்படுகிறது. இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் இப்பாலத்தின் வழியே செல்லும் ,மாணவிகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, பாதுகாப்பு கருதி, ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சீரான இடைவெளியில் அதிக மின்னொளி திறன்கொண்ட மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com