விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டியைத் தாக்கி 4 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி 2 ஆவது மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (70). வீட்டில் தனியே வசித்து வருகிறார்.
வீட்டின் வெளியே காய வைத்திருந்த சீரகத்தை அள்ளிக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் படியேறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இதில் காயமடைந்த ராஜம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


