விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பந்தல்குடியில் திங்கள்கிழமை இரவு திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அக்கிராம பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான நீர் நிலைகளைக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், பயிர்க்காப்பீடு, விவசாய விளை பொருள்களுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினர்.
அதேபோல மகளிர்க்கான நலத்திட்டங்கள் பற்றியும் மகளிர் சுகாதார மையங்களின் தேவை குறித்தும் பெண்கள் கோரிக்கைகள் வைத்தனர்.
அவற்றுக்கு விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. ராமச்சசந்திரன் விளக்கமளித்துப் பேசினார்.
உடன் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலரும், பந்தல்குடி கிராம விவசாயிகளும், ஏராளமான பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளாண்டா்ஸ் தொற்று அச்சம் தவிா்! விழிப்புணா்வு தவறேல்!!

செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி

பணிகள் முடிந்தும் திறக்காமல் உள்ள உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
