சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வெம்பக்கோட்டை ஒன்றியம் இந்திராகாலனி பகுதிகளில் சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும்

வெம்பக்கோட்டை ஒன்றியம் இந்திராகாலனி பகுதிகளில் சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பகுதியான தூங்காரெட்டியாபட்டி, வெள்ளையாபுரம், கிருஷ்ணாபுரம், எலுமிஞ்சங்கபட்டி, அன்பின்நகரம், மார்க்நாதபுரம், புல்லக்கவுண்டன்பட்டி, கொம்மிங்காபுரம், இந்திரா காலனி, சிவசங்குபட்டி, பழைய ஏழாயிரம்பண்ணை, செல்லையாபுரம்,கீழச்செல்லையாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எஸ்.வி.சீனிவாசன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது: என்னை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும். கடந்த 8 ஆண்டுகளில் உங்கள் பகுதிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யபட வில்லை. மேலும் திமுக ஆட்சியில் தான் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளும் நிறைவேற்றப்பட்டன. படித்த இளைஞர்கள் பட்டாசு, தீப்பெட்டி தொழிலை நம்பி இருக்கத் தேவையில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றார். மேலும் விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கும் வாக்கு சேகரித்தார்.
 இந்த பிரசாரத்தின் போது திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com