"திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும்'

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தீப்பெட்டித்தொழில் பாதுகாக்கப்படும் என அருப்புக்கோட்டை

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தீப்பெட்டித்தொழில் பாதுகாக்கப்படும் என அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். 
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.வி. சீனிவாசனை ஆதரித்து, சாத்தூர் பிரதான சாலை, மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் தெரு, முஸ்லிம் தெரு, வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியது:  பட்டாசு தொழிற்சாலைகள் தேர்தலுக்காக தற்காலிகமாக திறக்கபட்டுள்ளன. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  வெற்றி பெறச்செய்தால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழில், தீப்பெட்டித் தொழில் பாதுகாக்கப்படும். கிராமங்களில் செய்யப்படும், நூறு நாள் பணி 150 நாளாக உயர்த்தப்படும், சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை குறைக்கப்படும். நிறுத்தப்பட்ட உதவித்தொகைகள் மீண்டும் வழங்கப்படும் என்றார். 
  பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com