திருத்தங்கலில் மனைவியை தாக்கிய கணவனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி சாலைப் பகுதியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி மகேஸ்வரன்(45). இவரது மனைவி சாந்தா (40).
இவர்களுக்குள் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில், மகேஸ்வரன் எரிவாயு உருளையால், மனைவி சாந்தாவை தலையில் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர்.