சாத்தூர் தொகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் திமுக வேட்பாளர் சீனிவாசன் திங்கள்கிழமை இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.வி. சீனிவாசன், அத் தொகுதியில் உள்ள நதிக்குடி, ஆத்தூர், சிவனாண்டிபட்டி, கிருஷ்ணாபுரம், டி.என்சி. காலனி, டி.என்.சி. முக்குரோடு, ராசாபட்டி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:
கடந்த 8 ஆண்டுகளில் தொகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. திமுக வெற்றி பெற்றவுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
திமுக ஆட்சியில்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
எனவே, சாத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரசாரத்தின்போது, திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.