சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிமுகவினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
அதிமுக கூட்டணியிலுள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர் ஆர். அழகர்சாமியை ஆதரித்து, சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிப் பகுதிகளில் வார்டு வாரியாக அதிமுகவினர் தேர்தல் பிரசாரம் செய்தனர். அதிமுக வார்டு செயலர்கள் தலைமையில், அந்த வார்டுகளில் கட்சிக் கொடியேந்தி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது, தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.