தேர்தல் விதிமீறல் இருவர் மீது வழக்கு

தேர்தல் விதியை மீறியதாக, சிவகாசியில் திங்கள்கிழமை இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தேர்தல் விதியை மீறியதாக, சிவகாசியில் திங்கள்கிழமை இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
சிவகாசி பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் ஞாயிற்றுக்கிழமை இரவு வேனில் சென்று வாக்கு சேகரித்தார். 
அப்போது, கருப்பண்ணன் சாலை வடக்கு குலாலர் தெருவில் வீரபாண்டி என்பவரும், மீனம்பட்டியில் பொன்ராஜ் என்பவரும் தேர்தல் விதியை மீறி மின்கம்பத்தில் கட்சிக் கொடியை கட்டியிருந்தனராம். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com