விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வீதி, வீதியாகச் சென்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு வாக்குகேட்டு அவர்கள் வீடு, வீடாக துண்டுப் பிரசுரங்களை கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.