ஸ்ரீவிலி.யில் 180 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வீட்டில் ராணுவ கேன்டீனில் விற்பனை செய்யப்படும் 180 மது பாட்டில்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வீட்டில் ராணுவ கேன்டீனில் விற்பனை செய்யப்படும் 180 மது பாட்டில்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
  ஸ்ரீவில்லிபுத்தூர், நெசவாளர் காலனியில் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் உள்ளது. இப் பகுதியில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமார், சார்பு ஆய்வாளர் ராஜவேல் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் உள்ள கணேசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 180 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com