விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் விநியோகம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் நெல் விதைகள் விநியோகிக்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ல.முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். 
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் நடப்பு வருடத்தில் நெல் பயிர்க்கான சாகுபடி பரப்பு 2,000 ஹெக்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற விதைகளான டி.கே.எம்.13, ஆர்என்ஆர் 15048 மற்றும் என்எல்ஆர் 34449 ரக நெல் விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  மேற்காணும் விதைகள் விதைக் கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.   
 மேலும் விபரங்களுக்கு, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை கீழ்க்காணும் செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அச்சந்தவிர்த்தான்-86670 51903, பிள்ளையார்குளம்-90804 97023, மம்சாபுரம்-97894 46220, பாட்டக்குளம் சல்லிப்பட்டி-90470 10165, விழுப்பனூர்-95859 94505, ஸ்ரீவில்லிபுத்தூர்- 98430 68406 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com