அழகாபுரி வழியாக விருதுநகருக்கு இயக்கப்பட்ட 2 அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

ராஜபாளையத்திலிருந்து அழகாபுரி வழியாக விருதுநகருக்கு இயக்கப்பட்டு வந்த 2 அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


ராஜபாளையத்திலிருந்து அழகாபுரி வழியாக விருதுநகருக்கு இயக்கப்பட்டு வந்த 2 அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ராஜபாளையத்திலிருந்து விருதுநகருக்கு காலை 5:30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல விருதுநகரிலிருந்து ராஜபாளையத்துக்கு காலை 5:30 மணியிலிருந்து இரவு 10:45 மணி வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் மணிக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் ராஜபாளையத்தில் இருந்து விருதுநகருக்கு காலை 7:40 மணிக்கும், விருதுநகரில் இருந்து ராஜபாளையத்துக்கு மாலை 5:30 மணிக்கும் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் எந்த முன்அறிவிப்பும் இன்றி அண்மையில் நிறுத்தப்பட்டன.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் ராஜபாளையம்-அழகாபுரி-விருதுநகர் வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படாமல் உள்ள பேருந்துகளை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com