மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தமிழரசன், கௌதமன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகி மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.