சிவகாசியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகாசியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சிவகாசியில் பள்ளி அமைந்தால் சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். இப்பள்ளி கட்டுவதற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும். மத்திய அரசு பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மக்களவையில் பேசுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.