திருச்சுழி கிளை நூலகத்தில் இலவச ஹிந்தி பயிற்சி வகுப்பு தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளைப் பொது நூலகத்தில் இலவச ஹிந்தி மொழிப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளைப் பொது நூலகத்தில் இலவச ஹிந்தி மொழிப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
  வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ஈஸ்வரி பாஸ்கரன் பயிற்சியளிக்கிறார்.
 இதுதொடர்பாக இக்கிளை நூலகத்தின் நூலகர் சு.பாஸ்கரன் கூறியது: அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறும் விதமாக இலவசமாக வழங்கப்படும் ஹிந்தி மொழிப்பயிற்சி வகுப்புகளில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். 
   இதன்மூலம் அவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் ஹிந்தித் தேர்வுகளை எழுதி, அதில்  தேர்ச்சி பெறமுடியும் என்றார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com