ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி கொலை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளியின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (30). இவருக்கு சீனித்தங்கம் என்ற மனைவியும், 2  ஆண் குழந்தைகளும் உள்ளனர். 
கட்டடக் கூலி தொழிலாளியான இவர், அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த  வெள்ளிக்கிழமை (ஆக. 2) இரவு 9 மணிக்கு, மனைவியுடன் சண்டை போட்டு விட்டு  சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக உறவினர்கள் சனிக்கிழமை (ஆக.3) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பால்ராஜின் சகோதரர் இசக்கி முத்து, கருங்குளம் பகுதியில்  விவசாய நிலத்தில் பால்ராஜின் இரு சக்கர வாகனம் இருப்பதை பார்த்துள்ளார். அவர் அருகே சென்று பார்த்த போது கொலை செய்யப்பட்ட நிலையில் பால்ராஜின் சடலம் இருந்துள்ளது.
இதுதொடர்பாக இசக்கி முத்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.  அப்போது  தலையில் சுத்தியலால் அடித்தும், கத்தியால் குத்தியும் பால்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 
சம்பவ இடத்தில் ராஜபாளையம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான  போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த  கொலைச் சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com