விருதுநகரில் பள்ளி மாணவர் மாயம்

விருதுநகரில் 9 ஆம் வகுப்பு மாணவர் மாயமானதாக  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விருதுநகரில் 9 ஆம் வகுப்பு மாணவர் மாயமானதாக  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 விருதுநகர் பாண்டியன் நகர் சத்யசாயி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி மற்றும் மகன் சத்ய பிரகாஷ் (14) விருதுநகரில் வசித்து வருகின்றனர். 
சத்ய பிராகஷ் சூலக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர், சரியாக படிக்காத காரணத்தால் தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. 
 இதனால், பிரகாஷ் வீட்டை விட்டு சனிக்கிழமை சென்று விட்டாராம். 
  அவரை, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லையாம். 
 இது குறித்து மாணவரின் தந்தை சீனிவாசன் அளித்தப் புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து மாணவரைத் தேடி வருகின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com