திருச்சுழி தனியார் பள்ளியில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ச.வைத்திலிங்கநாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஒன்றிய

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ச.வைத்திலிங்கநாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை கபடி இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளிலிருந்து 50 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 16 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் புதன்கிழமை கபடி இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறார்(ஜூனியர்) பிரிவில் நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அணியுடன் திருச்சுழி ச.வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளிஅணியும் மற்றும் முதுநிலை(சீனியர்)பிரிவு கபடிப் போட்டியில் திருச்சுழி ச.வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி அணியுடன் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின.
இதில் 2 போட்டிகளிலும் திருச்சுழி ச.வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவரணியினர் வெற்றி பெற்றனர். வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் இறுதி நாள் விழாவில் வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com