திருத்தங்கல் ரயில் நிலையத்தில் மாணவிகள் துப்புரவுப் பணி

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் ,திருத்தங்கல் ரயில்நிலையத்தில்

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் ,திருத்தங்கல் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணி புதன்கிழமை  நடைபெற்ற து. 
   இதில் மாணவ, மாணவிகள் ரயில் நிலைய நடைமேடையை சுத்தம் செய்தனர். மேலும் பயணிகளிடம் பொது சுகாதாரம் குறித்தும், மறு சுழற்சிக்கு பயன்படும் குப்பைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.   இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலர்கள் ஆர்.ராஜசேகரன், எஸ்.ராஜ்குமார், எஸ்.பழனிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com