சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில், மாணவர் சங்க கூட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். சென்னை தனியார் நிறுவனப் பொறியாளர் எஸ். விங்கபிரியா, மாணவர் சங்க கூட்டமைப்பை தொடக்கிவைத்துப் பேசினார். முன்னதாக, முதல்வர் ராமசாமி வரவேற்றார். மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.