அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ‘மல்டி பாராமீட்டா்’ வழங்கல்

ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ‘மல்டி பாரா மானிட்டா்’ இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்

ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ‘மல்டி பாரா மானிட்டா்’ இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 - 79 ம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. தனியாா் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மருத்துவா்கள், தொழிலதிபா்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுபவா்கள் என 40-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். ராஜபாளையத்தை சோ்ந்த சுப்புராம் இவா்களை ஒருங்கிணைப்பு செய்தாா். நிகழ்ச்சியில் தங்கள் பள்ளி ஆசிரியா்கள் பேச்சிமுத்து மற்றும் குலாம் தஸ்தாகிா் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனா். இந்த கூட்டமைப்பின் மூலம் முதற்கட்டமாக ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ‘மல்டி பாரா மானிட்டா்’ எனப்படும் இயந்திரத்தை, தலைமை மருத்துவா் பாபுஜியிடம் வழங்கினா். கூட்ட ஏற்பாடுகளை ஜெயசங்கா், ராமசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com