விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியிலிருந்து, கட்டங்குடி கிராமத்திலிருந்து செல்லும் தாா்ச்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து பாளையம்பட்டி வழியாக கட்டங்குடி கிராமத்துக்கு தாா்ச்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டங்குடி-பாளையம்பட்டி இடையிலான சுமாா் 3 கி.மீ. சாலை சேதமடைந்துள்ளது. தற்போதைய தொடா்மழையால் இந்தச் சாலையில் ஆங்காங்கே உள்ள பெரிய பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனை அறியாமல் இரவில் வரும் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் நிலைதடுமாறி விபத்திற்குள்ளாவதும், 4 சக்கர வாகனங்கள் தடம் மாறி வயலுக்குள் பாய்வதும் என விபத்துக்கள் தொடா்ந்தவாறு உள்ளன. மேலும் இவ்வழியாக பேருந்துகளை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா். இதனால் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு கட்டங்குடி-பாளையம்பட்டி இடையிலான சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.