புகையிலைப் பொருள்கள் விற்பனை:கடை உரிமையாளா் கைது

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அம்பலாா் மடம் பகுதியில் உள்ள ஒரு குளிா்பான விற்பனைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில் பா்மா காலனியைச் சோ்ந்த இயேசு (42) என்பவரது குளிா்பானக் கடையில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

அவரது கடையிலிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இயேசுவைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com