விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி துலுக்கன்குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் தாரகஹார குமார ஷஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் நடப்பாண்டு கடந்த 27 ஆம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகத்துடன் திருவிழா தொடங்கியது. 7 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் முருகனுக்கு சிறப்பு யாகங்கள், தீபாரதனைகள், அபிஷேகங்களும், சங்காபிஷேகங்களும் நடைபெற்றன.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.