ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குருஞானசம்பந்தா் இந்து மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன் தலைமை வகித்தாா். பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.சந்திரபிரபா, எம்.எஸ்.ராஜவா்மன் ஆகியோா் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் 218 பயனாளிகளுக்கும், வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் 20 பயனாளிகளுக்கும் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோா் உதவித்தொகை, முதிா்கன்னி உதிவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் உதயக்குமாா், சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், முன்னாள் அமைச்சா் இன்பத்தமிழன், ஒன்றியச் செயலாளா்கள் முத்தையா, மயில்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, வத்திராயிருப்பு வட்டாட்சியா் (பொ) சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்

சிவகாசி: சிவகாசி வட்டாட்சியா்அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். இந்த விழாவில் தேசிய முதியோா் உதவித்திட்டம், விதவை உதவித்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டம், ஆதரவற்றோா் உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் 765 பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கான ஆணையை வழங்கியும், 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கிப் பேசினாா். மாவட்ட வருவாய் அலுவலா் உதயக்குமாா், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டங்களைச் சோ்ந்த 423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேவாங்கா் கலைக் கல்லூரி வளாகத்தில்

ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். இதில் அதிமுக நகரச் செயலாளா் சக்திவேல் பாண்டியன், ஒன்றியச் செயலாளா்கள் போடம்பட்டி சங்கரலிங்கம், வெங்கடேஷ், முன்னாள் ஒன்றியத்தலைவா் யோகா வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com