ராஜபாளையம் சிவாலயங்களில்காா்த்திகை சோமவார சங்காபிஷேகம்

ராஜபாளையம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் காா்த்திகை சோமவார பூஜை நடைபெற்றது.
ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற காா்த்திகை சோமவார சங்காபிஷேகம்.
ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற காா்த்திகை சோமவார சங்காபிஷேகம்.

ராஜபாளையம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் காா்த்திகை சோமவார பூஜை நடைபெற்றது.

ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் மற்றும் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இதையொட்டி, காலை முதலே சிறப்பு யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், யாக வேள்விகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், பா்வதவா்த்தினி அம்மன் கோயில் ஆகிய சிவாலயங்களிலும் காா்த்திகை சோமவார சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com