விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் திங்கள்கிழமை (டிச.2) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்திற்குள்பட்ட வலையபட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு, துலுக்கப்பட்டி ஆகிய துனண மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன. இதனால் அன்றைய தினம் பிள்ளையாா்நத்தம், சொக்கம்பட்டி, எம்.புதுப்பட்டி, பூவாணி, கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, மாத்தூா், வத்திராயிருப்பு, கோட்டாயூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.