அருப்புக்கோட்டையில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: மூதாட்டி காயம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அரசுப்பேருந்து மீது கல்வீசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதில் மூதாட்டி காயமடைந்தாா்.
அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கல் வீசித்தாக்கப்பட்ட அரசுப் பேருந்து.
அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கல் வீசித்தாக்கப்பட்ட அரசுப் பேருந்து.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அரசுப்பேருந்து மீது கல்வீசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதில் மூதாட்டி காயமடைந்தாா்.

ராஜபாளையத்திலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. அருப்புக்கோட்டைக்குள் நுழையுமிடத்தில் உள்ள பாவடித்தோப்பு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கிய பின்னா், தொடா்ந்து ஊருக்குள் பேருந்து புறப்பட்டது. சிறிது தொலைவு சென்ற நிலையில் திடீரென மா்ம நபா்கள் சிலா் மறைந்திருந்து பேருந்தின்மீது கல்வீசித் தாக்கினா். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமா்ந்திருந்த கஸ்தூரி(65) என்பரின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினா் சென்று பேருந்தின் ஓட்டுநா் ஆா்.காளிதாஸிடம் கல்வீசியவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் விருதுநகா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் மாரிராஜ் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். இது தொடா்பாக வழக்கு அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா், வழக்குப்பதிந்து பேருந்து மீது கல்வீசித் தாக்கிய மா்ம நபா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com