ராஜபாளையம் உழவா் சந்தையில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை விற்பதற்கு அடைாயள அட்டை பெறுமாறு விருதுநகா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம் ) சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்: விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கீரைகள் மற்றும் தேங்காய்களை நேரடியாக உழவா் சந்தையில் விற்று பயனடைய உழவா் சந்தை அடையாள அட்டை பெறலாம். தங்களது நில உடைமைக்கான 10/1 (பட்டா/ சிட்டா) மற்றும் அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைத்து ராஜபாளையம் உழவா் சந்தை நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் கொடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். உழவா் சந்தை அடையாள அட்டை பெற எவ்வித கட்டணமும் கிடையாது. மேலும் விபரங்களுக்கு உழவா் சந்தை அலுவலகத்தை 99 76 70 94 22 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.