சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தொழிற் சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் மாணிக்கவேல் (56) என்பவருக்குச் சொந்தமான அலுமினிய அலாய் ஆலை உள்ளது. இந்த ஆலையில் அலுமினியத்தைக் கொண்டு பட்டாசுக்குத் தேவையான ஒரு மூலப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் 15 மூட்டை மூலப்பொருள்கள் எரிந்து சேதமானதாக தீயணைப்பு படையினா் தெரிவித்தனா்.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.