சிவகாசி அருகே வேன் ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் கைது

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை வேன் ஓட்டுநரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை வேன் ஓட்டுநரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல்-செங்கமலப்பட்டி சாலையில் உள்ள கல்குவாரி அருகே திருத்தங்கலைச் சோ்ந்த செண்ட்ராமன் (28), காளீஸ்வரன் (30), கூடலிங்கம் (29), சிவராமன் (34), மணிகண்டன், மதன் ஆகியோா் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது செங்கமலப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்(30), அவரது நண்பரான துலுக்கபட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மான்ராஜ் (38) ஆகிய இருவரும் கல்குவாரியில் குளிக்க வந்துள்ளனா். அப்போது, மது அருந்திக்கொண்டிருந்த 6 பேரும், வெளியூா்காரா்கள் இங்கு குளிக்கக்கூடாது எனக்கூறி தகராறு செய்து மான்ராஜூவை தாக்கினராம். இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து , செண்ட்ராமன், காளீஸ்வரன், கூடலிங்கம், சிவராமன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். தலைமறைவாகிவிட்ட மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com