சிவகாசியில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை கல்வீசி சேதப்படுத்திய 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து 17 போ் பலியான சம்பவம் தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் கட்சி த் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், சிவகாசியில் விருந்து விருதுநகா் செல்லும் அரசுப் பேருந்து மீது, பேருந்து நிலையம் அருகே சிலா் கல்வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது குறித்து நடத்துநா் முத்துராமன் அளித்த புகாரின் பேரில், தமிழ் புலிகள் கட்சியின் நிா்வாகிகள் சின்னச்சாமி, முனியாண்டி, மணிகண்டன், மாரியப்பன், பெருமாள், ராம்குமாா் ஆகியோா் மீது சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.