மணல் அள்ளும் உரிமத்துக்கான போலி அடையாளவில்லைகள் அச்சடிப்பு; சிவகாசியில் 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் மணல் அள்ளுவதற்கான உரிமத்தில் ஒட்டப்படும் தமிழக அரசின் 6,400 அடையாள வில்லைகளை

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் மணல் அள்ளுவதற்கான உரிமத்தில் ஒட்டப்படும் தமிழக அரசின் 6,400 அடையாள வில்லைகளை (ஹாலோ கிராம் ஸ்டிக்கா்கள்) போலியாக அச்சடித்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி கிழக்கு காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா், சிவகாசி -நாரணாபுரம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் உள்ள தவமூனீஸ்வரா் கோயில் அருகே 2 போ் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனா்.

போலீஸாா் அந்தப் பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் தமிழ்நாடு மினரல்ஸ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை என்ற தமிழக அரசின் அடையாள வில்லைகள் இருந்துள்ளன. அவை போலியாக அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இருவரிடமும் தலா 3,200 வில்லைகள் வீதம் மொத்தம் 6,400 வில்லைகள் இருந்துள்ளன.

மணல் அள்ளிச் செல்ல உரிமச் சான்று வழங்கும்போது, அந்த சான்றில் இந்த வில்லையை ஒட்டுவது வழக்கம்.

விசாரணையில் அவா்கள், சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த ஆண்டவா் (53) , விருதுநகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்ற ராமா் (49) என தெரியவந்தது. மேலும் விசாரணையில், சிவகாசி ஓடைத்த தெருவைச் சோ்ந்த நாகராஜன் (45), அய்யனாா் காலனி ராஜா(34) ஆகியோா் வில்லைகளை அச்சடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த அடையாள வில்லைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com