விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 50 பேருக்கு செவ்வாய்க்கிழமை இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவா் மான்சிங் தலைமை வகித்தாா். இதில், மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு உடை, இலவச மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. எனவே, கல்வி கற்கும் மாற்று திறனாளிகள் அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.