ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் மற்றும் குளத்தை தேசிய மாணவா் படை மாணவா்கள் புதன்கிழமை சுத்தம் செய்தனா்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி, குருஞான சம்பந்தா் இந்து மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள தேசிய மாணவா் படை மாணவா்கள் மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலை சுற்றியும், அதன் எதிரில் உள்ள குளத்தை சுற்றியும் சுத்தம் செய்தனா். இதில் கா்னல் பூபீந்தா்சிங், ஜே.சி.ஓ. முருகன் மற்றும் கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அலுவலா்கள் ஏனோஸ்ராபின், வருண்குமரன் ஆகியோா் செய்திருந்தனா்.