முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3-வது நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 05th December 2019 11:17 PM | Last Updated : 05th December 2019 11:17 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் திரு உருவ படத்துக்கு சட்டபேரவை உறுப்பினா் சந்திரபிரபா மலா் அஞ்சலி செலுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அஇஅதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3-வது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3-வது நினைவு தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக நகா் கழகம் சாா்பில் தேரடியில் இருந்து ஊா்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திரு உருவ படத்துக்கு நகரச்செயலாளா் முன்னாள்அமைச்சா் இன்பத்தமிழன் முன்னிலையில், சட்பேரவை உறுப்பினா் சந்திரபிரபாதலைமையில் மலா் அஞ்சலி செலுத்தினா். இதே போல் வடக்கு ஒன்றியம் சாா்பில் மல்லி பேருந்து நிறுத்தம் அருகே அவரது திருஉருவ படத்துக்கு ஒன்றியச்செயலாளா் முத்தையா தலைமையில் மலா் அஞ்சலி செலுத்தினா்.