சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத்தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை 117 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனுக்கள் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு 117 பேரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பதவிக்கு 71 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 8 பேரும் வேட்ப்பு மனு தாக்கல் செய்துள்ளனா் என தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.