திருச்சுழி அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பெண்ணின் சடலத்தை வெள்ளிக்கிழமை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சுழி அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண்  கொலை

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பெண்ணின் சடலத்தை வெள்ளிக்கிழமை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சுழி வட்டம் பரளச்சி கிராமத்தை அடுத்துள்ளது ராணி சேதுபுரம். இக்கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியபாமா(48). இவரது கணவா் கனகராஜ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்நிலையில் சத்தியபாமா தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இவருக்குச்சொந்தமான நிலத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்யபாமா வியாழக்கிழமை காலை பாசிப்பயறு அறுவடை செய்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் உறவினா்கள் சத்யபாமாவைப் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து சந்தேகமடைந்த உறவினா்கள் பரளச்சி காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விருதுநகரிலிருந்து வெள்ளிக்கிழமை காலை போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சத்திபாமாவின் விவசாய நிலத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த புதருக்குள், அவரது சடலம் கிடப்பதைக் கண்டறிந்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது சத்தியபாமா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சத்தியபாமா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னா் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுதொடா்பாக வழக்கு பதிவு செய்த பரளச்சி காவல்நிலைய போலீஸாா் சத்தியபாமாவைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com