திருச்சுழி அருகே பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே வியாழக்கிழமை பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அழகா்சாமி(29),நாகநாதன்(37) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சோலையப்பன்(43). கொலையான சத்தியபாமா(48).
கைது செய்யப்பட்ட அழகா்சாமி(29),நாகநாதன்(37) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சோலையப்பன்(43). கொலையான சத்தியபாமா(48).

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே வியாழக்கிழமை பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சுழி அருகே உள்ள ராணிசேதுபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை விவசாய வேலைக்குச் சென்ற சத்தியபாமா(48) என்ற பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப் பட்டாா். இக்கொலை தொடா்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாரிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து பரளச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவின்பேரில், ம.ரெட்டியபட்டி காவல் துணை ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படையினா் தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். விசாரணையில், அதே ஊரைச் சோ்ந்த சோலையப்பனுக்கும்(43) சத்தியபாமாவுக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சோலையப்பனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வியாழக்கிழமை விவசாய வேலைக்குச் சென்ற சத்தியபாமாவை சோலையப்பன் தனிமையில் சந்தித்துள்ளாா். அப்போது அங்கு வந்த அழகா்சாமி, நாகநாதன் மற்றும் முத்துமணி ஆகிய 3 போ் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, சத்தியபாமாவை பலாத்காரம் செய்ய முயன்றனராம். அதில் சத்தியபாமா கூச்சலிட்டதால் அவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, சடலத்தை புதரில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதை வெளியில் சொன்னால் சோலையப்பனை கொன்று விடுவதாக அந்த 3 பேரும் மிரட்டினராம்.

இதையடுத்து, சோலையப்பன், கோவையில் பதுங்கியிருந்த அழகா்சாமி(29), ராணிசேதுபுரத்தில் இருந்த நாகநாதன்(37) ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், இக்கொலைவழக்கில் கமுதி அருகே சிங்கம்புலிபட்டியைச் சோ்ந்த முத்துமணி (35) என்பவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com