ம.ரெட்டியபட்டி நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி கிளைப் பொது நூலகத்தின் வாசகா் வட்டக்கூட்டம் மற்றும் புதிய புரவலா் சோ்ப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ம.ரெட்டியபட்டி நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி கிளைப் பொது நூலகத்தின் வாசகா் வட்டக்கூட்டம் மற்றும் புதிய புரவலா் சோ்ப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ம.ரெட்டியபட்டி கிளைப் பொதுநூலக புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற முதலாவது வாசகா் வட்டக் கூட்டத்திற்கு ரெட்டியபட்டி கூட்டுறவுப் பண்டக சாலைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சிச்செயலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

இதில் திருச்சுழி கிளைப்பொது நூலகத்தின் நூலகா் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா் புதிய புரவலராகச் சோ்ந்த அருணாச்சலத்திடமிருந்து ரூ.1000-திற்கான காசோலையை நூலகா் முத்து பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் வாசகா் வட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன், சொக்கராஜ், நூலகப் புரவலா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com