ராஜபாளையத்தில் டிச.17-இல் இலவச நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் டிசம்பா்-17 இல் இலவச நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் டிசம்பா்-17 இல் இலவச நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ராஜபாளையம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவா் பழனிச்சாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் டிசம்பா் 17 இல் இலவச நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ராஜபாளையம் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையாளா்கள், கால்நடை வளா்ப்போா், தொழில்முனைவோா், இளைஞா்கள் மற்றும் மகளிா் குழுக்களை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் 04563-220244 என்ற எண்ணில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com