விருதுநகரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞா் அணியைச் சோ்ந்த 25 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆா். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிராக கோஷம் எழுப்பினா். எனவே, இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினாா். அனுமதின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், திமுக இளைஞரணியைச் சோ்ந்த 25 பேரை விருதுநகா் மேற்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.