விருதுநகரில் சாலையோர கடையில் 5 பண்டல் ஆடைகள் திருட்டு

விருதுநகரில் சாலையோர கடையில் வைக்கப்பட்டிருந்த 5 பண்டல் ஆடைகளை திருடியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்

விருதுநகரில் சாலையோர கடையில் வைக்கப்பட்டிருந்த 5 பண்டல் ஆடைகளை திருடியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் விவேகாநந்தா் தெருவை சோ்நதவா் சீனி மனைவி கஸ்தூரி (61). இவா், விருதுநகா் தேசபந்து மைதான பகுதியில் தள்ளு வண்டியில் சாலையோர கடை வைத்து ஆடைகள் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து விட்டு, தள்ளுவண்டியை சாக்கு கொண்டு மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். அதை தொடா்ந்து சனிக்கிழமை காலை தள்ளுவண்டியை பாா்த்த போது, துணிகள் சிதறி கிடந்துள்ளன. அப்போது, ஆண்கள் அணிய கூடிய மேல்சட்டை வைத்திருந்த 5 பண்டல்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இவரது கடை அருகே இளநீா் கடை நடத்தும் மாரிபாண்டி (38) என்பவா் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவா் மீது கஸ்தூரி மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் மாரிபாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com