ஸ்ரீவரத விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா

விருதுநகர் அருகே ஆர்ஆர் நகரில் உள்ள  ஸ்ரீவரத விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் அருகே ஆர்ஆர் நகரில் உள்ள  ஸ்ரீவரத விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஆர்ஆர் நகர், ராமசாமி ராஜா நகரில் ஸ்ரீவரத விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. அதைத் தொடர்ந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோ பூஜை, கஜ பூஜை, தீர்த்த சங்கரஹணம், யாகசால பிரவேசம், யாக சங்கல்பம் மற்றும் முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜை நடைபெற்றன. 
அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பிம்புத்தி ரஷபந்தானம், நான்காம் கால பூஜை, யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து வரத விநாயகர் கோயில் விமானக் கலசத்தில் பட்டாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். 
இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ராம்கோ குரூப் தலைவர் வெங்கட்ராமராஜா, நிர்மலா ராஜூ, அபிநவ் சுப்பிரமணியம் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராம்கோ குரூப் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com