திரைப்படத்திற்கு சாதி பெயரை சூட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திரைப்படத்திற்கு "குறவன்' என்ற பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்கக் கோரியும்
திரைப்படத்திற்கு சாதி பெயரை சூட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திரைப்படத்திற்கு "குறவன்' என்ற பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் பழங்குடி குறவன் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆவணங்களில் "நரிக்குறவன்' என்ற பெயருக்கு மாற்றாக "வாக்கிரி' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். எங்கள் இனப் பெயரை திரைப்படங்களில் தவறாக சித்தரிப்பதை தடுக்க வேண்டும். மேலும் "குறவன்' என்ற பெயரில் உருவாக்கப்படும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள கோரிக்கையான, குறவர்களான எங்களை "மலைக்குறவன்' என பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இது 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், எங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களது சமுதாய மக்களுக்கு அரசு அளிக்கும் உதவிகளையும் பெற முடியவில்லை. இதனால், எங்களது முன்னேற்றம் தடைபட்டுள்ளது. எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதைத் தொடர்ந்து, கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமாரிடம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com