சிவகாசி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
  ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனையடுத்து இக்கல்லூரியில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குபதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறையைச் சேர்ந்த கார்த்திக்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிரேமலதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com