ராஜபாளையம் அருகே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஐயர். இவரது மகள் கலைதேவி (15). மீனாட்சிபுரத்தில் தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை அவர் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.