ராஜபாளையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் சாவு

ராஜபாளையத்தில் சனிக்கிழமை லாரி சக்கரத்தில்  சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

ராஜபாளையத்தில் சனிக்கிழமை லாரி சக்கரத்தில்  சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.
ராஜபாளையம், ஊரணிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆறுமுகப்பாண்டி (21). இவர் ஐடிஐ முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக  வேலை செய்து வந்தார். இந் நிலையில் தனது நண்பர்கள் சரவணன், பிரபாகர் ஆகிய இருவரோடும் டி.பி .மில்ஸ் சாலையில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனம் நிலை  தடுமாறி அருகில் வந்து கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி ஆறுமுகப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதில் அவரது நண்பர்கள் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். 
விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com