இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) சிவகாசி நகர் மற்றும் ஒன்றியம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலையில்லாத நாள்களை கணக்கிட்டு பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து மத்திய அரசு பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவற்றை தமிழக அரசு சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் நிர்வாகிகள் ஆர்.சுரேஷ்குமார், பி.பாண்டி, லாசர், மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.